இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் தந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியூகங்களின் அடிப்படையில் இயக்கப்பணி, மக்கள் சந்திப்பை தமாகா அதிகரித்து கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் முடிவுகளை தாமதமின்றி அறிவிப்போம். நாடாளுமன்ற தேர்தலில் தமாகா போட்டியிடும். தொகுதிகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.