கன்னியாகுமரி: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகின் ஆங்கர் ரோப் அடித்து மீனவர் திவாகர் மாலிக் என்பவர் உயிரிழந்தார். முட்டம் ஜெபியார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 35 மைல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். படகின் ஆங்கர் ரோப் எதிர்பாராதவிதமாக விழுந்து காயமடைந்த திவாகர் மாலிக் கரை திரும்பும் வழியில் பலியானார். ஒடிசாவை சேர்ந்த மீனவர் திவாகர் மாலிக் உயிரிழந்த நிலையில் தேவிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் நவாஸ் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த மீனவர் நவாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.