திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரி ஒருவரிடம் உளவுத்துறையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், ‘எனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். 4 அல்லது 5 நாளைக்கு ஒருமுறை மொத்தமாக கொடுத்திடு. யார் பிடிச்சாலும் என் பெயர் சொல்லக்கூடாது’ என்று பேரம் பேசிய ஆடியோ கடந்த 4 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வேலூரில் உள்ள உளவுத்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்ஐ ரங்கநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் எஸ்ஐ ரங்கநாதன் நேற்று அதிரடியாக வேலூர் உளவுத்துறை டிஎஸ்பி அலுவலக பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் எஸ்ஐ ரங்கநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.