வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவருக்கான தேர்தல் (2024 – 2025) நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பார் அசோசியேஷனில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தீஸ்வரன், செயலாளர் குமரேசன், பொருளாளர் மதியழகன், இணைச் செயலாளர் செல்வகுமார், துணைத்தலைவர் இளங்கோவன், பெண்கள் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ஜோஸ்பின் விஜி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்க்ளுக்கு செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி