சென்னை: வங்கியில் ரூ. 25கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் பெற்றுத்தருவதாகக் கூறி தவணை முறையில் கிருஷ்ணகுமார் என்பவரிடம் ரூ. 86 லட்சம் மோசடி செய்துள்ளார். கடன் வாங்கித் தராமல் ஏமாற்றியதாக கிருஷ்ணகுமார் அளித்த புகாரில் லயன் முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தபட்ட ஏஞ்சலினா, கிறிஸ்டி நிஷா ஆகியோரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.