இந்நிலையில் அந்த நிலம் வங்கியில் ₹26 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக உமர் ஷெரீப்புக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடைய பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று டிஜிபியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் பல மாதங்களாகியும் முன்பணம் திருப்பிக் கிடைக்காதால் உமர் ஷெரீப் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிபுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், டிஜிபியின் மனைவிக்கு சொந்தமான 10.8 சென்ட் நிலத்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டது. பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே ஜப்தி நடவடிக்கையை ரத்து செய்ய முடியும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புக்கு கேரள அரசு ஒரு வருடம் பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது.