அதற்கு பதிலளித்து தெலங்கானாவில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி,‘‘இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் என் குடும்பம் தான்’’ என குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பாஜ தலைவர்கள் பலர் தங்களுடைய சமூக வலைதள முகப்பு பக்கத்தில் மோடியின் குடும்பம் என சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் உண்மையான குடும்பம் என்ற பெயரில் டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில்,வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டு தலைமறைவான நீரவ் மோடி, விஜய் மல்லையா,மெகுல் சோக்ஸி உட்பட குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களின் படங்களுடன் மோடி படத்தை வெளியிட்டுள்ளனர். இது பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.