வங்காளதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்டை நாடான வங்காளதேசத்தில் உள்நாட்டுப் பிரச்சனையின் காரணமாக மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. இந்தியாவில் நீட் தேர்வு நெருக்கடியால் வங்காள தேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க அங்கு இருப்பதும் தெரிய வருகிறது. பணியாளர்களாக வேலை செய்பவர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தவித்துவருகின்றனர். வங்காளதேசத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களையும் பணி செய்யும் நபர்களையும் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்புவதற்குத் தமிழ்நாடு அரசு உரிய முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது..!!

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கு விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை

கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில் இணைந்த இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!!