புதுடெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் வரவேற்றார். கடந்த 9ம் தேதி பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் பதவியேற்றார். இந்த விழாவில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.