டெல்லி: வன்முறை சம்பவங்களால் அசாதாரண சூழல் நிலவும் வங்கதேசத்தில் இருந்து 978 மாணவர்கள் நாடு திரும்பினர். 200 மாணவர்கள் விமானம் மூலமும், 778 மாணவர்கள் கப்பல், படகுகள் மூலமாகவும் நாடு திரும்பி உள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் 4,000 இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தங்கியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.