பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இருவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேர் பெங்களூரு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தரப்பில் மனு செய்யப்பட்டது.