சென்னை: வேங்கை வயல் வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. புலன் விசாரணையை விரைந்து முடிக்க தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்த்தியுள்ளார். ஜூலை 3க்குள் வேங்கை வயல் வழக்கு புலன் விசாரணை செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள்; வேங்கைவயல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.