தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கைதிகள் 200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மின் விசிறிக்கு கீழே காற்று வரும் பகுதியில் தூங்க இடம் பிடிப்பதில் கைதிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும்.
நேற்று முன்தினம் இரவும் அங்குள்ள கைதிகள் இடையே மின் விசிறிக்கு கீழே படுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து கைதிகள் 10 பேர் இரு தரப்பாக மோதிக் கொண்டனர். இதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றினர். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.