ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு வாழைத்தார் ஏலம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இந்த வாரத்திற்கான வாழைத்தார் ஏலம், நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது.

இந்த ஏலத்தின் போது, 5 விவசயிகள் மொத்தம் 212 வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர்.விவசாயிகள் கொண்டு வந்த வாழைத்தார்கள் தனித்தனி ரகமாக ஏலம் நடைபெற்றது. இதில், செவ்வாழத்தார் ஒரு கிலோ ரூ.45 வரையிலும், கற்பூர வள்ளி ரூ.28 வரையிலும், நேந்திரன் ரூ.25க்கும் ஏலம் போனது. இதில், விவசாயிகள் கொண்டு வந்த மொத்தமுள்ள வாழைத்தார்களும் ரூ.40 ஆயிரத்து 779க்கு ஏலம்போனது. இதனை வியாபாரிகள் 5 பேர் கொள்முதல் செய்தனர்.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி