சென்னை: தடையை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தீ விபத்துகளைக் தவிர்க்க ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்புகளுக்கு பட்டாசு கொண்டு செல்வோரே பொறுப்பேற்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.