கேரளாவில் கோயில்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பயிற்சி உள்பட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார் கூறப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள; தடை செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கோயில்களில் பயிற்சி மற்றும் பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. இதன்படி கோயில்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு

மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை

அனைத்து சவால்களையும் முறியடித்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது : ஆர்.எஸ்.பாரதி பேட்டி