வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முறைகேடு குற்றச்சாட்டு மீதான விசாரணை தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி, விசாரணயை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.