பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி சட்டமன்ற கூட்டத்தில் முதல்வரும் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே வலிறிவுறுத்தி இருந்தேன். கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் போட்டு தண்ணீர் தர முடியாது என மறுத்தார்கள். தென்மேற்கு பருவமழை இரண்டு வாரங்களில் தொடங்கி விடும். அப்போது உபரி நீரை திறந்து விட்டு தண்ணீர் கணக்கை சரி செய்ததாக அரசியல் செய்வார்கள், என்றார்.