உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘பட்சி தீர்த்தம்’ என்றழைக்கப்படும், வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில், மீண்டும் பட்சி வர வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஆண்டுதோறும் வேதகிரீஸ்வரருக்கு ‘வேதமலை பெருவிழா குழு’ சார்பில், 1008 பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, அகஸ்திய கிருபா அன்பு செழியன் தலைமையில் 1008 பால் குட ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் வளாகத்திலிருந்து பெண்கள் தங்கள் தலையில் பால் குடத்துடன் வேதகிரீஸ்வரர் மலை கோயிலுக்கு சென்று வேதகிரீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!