இந்த வழக்கில் குற்றவாளிகளான ராதேஷாம் பகவான்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகியோர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர் அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அதனால் மறுஆய்வு மனு மீது தீர்ப்பு வரும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனு விசாரணைக்கு உகந்தது என எப்படி கூற முடியும்? இதில் உங்களின் அடிப்படை உரிமைகள் எங்கு பாதிக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.