இந்நிலையில், நேற்று முன்தினம் இவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து ராபின் கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்து சென்னைக்கு செல்ல முயன்றார். அப்போது சென்னை மடிப்பாக்கம் போலீசார் அவரை சிறை வாசலிலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர். சென்னையில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் ராபினுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ராபினை போலீசார் கைது செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ராபினை சென்னைக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின்னரே எந்த வழக்கு தொடர்பாக ராபின் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்.