சபரிமலை பொன்னம்பலமேட்டில் பூஜை சென்னையை சேர்ந்தவரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: சபரிமலை அருகே உள்ள பொன்னம்பலமேட்டில் கடந்த மே மாதம் 8ம் தேதி, சிலர் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில் பூஜை நடத்தியது நாராயணன் என்பவரின் தலைமையிலான சிலர் என்பது தெரியவந்தது. இதில் பொன்னம்பலமேட்டுக்கு செல்ல பணம் வாங்கி கொண்டு அனுமதித்த வனத்துறை ஊழியர்கள் ராஜேந்திரன் கருப்பையா, சாபு மேத்யூ, இடுக்கியை சேர்ந்த சரத், சூரத் சுரேஷ், குமுளி சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நாராயணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை பத்தனம்திட்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு