Friday, July 5, 2024
Home » வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ5.88 கோடி கடன் மோசடி செய்த 2 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ5.88 கோடி கடன் மோசடி செய்த 2 பெண்களின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

by Neethimaan

சென்னை: வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ5.88 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பெண்களின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாடி பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர், எட்டிகா அரோமா, கார்டமான் கார்டன், கிரீன் லீப் என்ற தனது நிறுவனங்களின் பெயரில், முறையே ரூ98 லட்சம், ரூ99 லட்சம், ரூ96 லட்சம் என ரூ2 கோடியை 93 லட்சத்தை பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு தனது கணவர் பெயரில் ஆதனூரில் உள்ள நிலத்தை ஈடாக வங்கியிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடன் பணத்தை திரும்ப செலுத்ததால் அவரது சொத்துகளை ஆய்வு செய்தபோது சிவரஞ்சனியின் கணவருக்கு அந்த சொத்துகள் சொந்தமில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, சிவரஞ்சனியை கடந்த 1ம் தேதி கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிவரஞ்சனி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, மனுதாரர் வங்கியில் ஈடாக வைத்துள்ள சொத்துகள் அவரின் கணவருக்கு சொந்தமானதல்ல. இந்த வழக்கில் 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் மிகப்பெரிய தொகை சம்பந்தப்பட்டுள்ளதால் தற்போது ஜாமீன் வழங்க முடியாது. எனவே, சிவரஞ்சனியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதேபோல், 3 சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்து ரூ2 கோடியை 95 லட்சம் வங்கி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொரட்டூரை சேர்ந்த பே லீப், கோல்டன் லீப், அக்‌ஷயா உட்லேண்ட் நிறுவனங்களின் அதிபர் சங்கரேஷ்வரி என்பவரின் ஜாமீன் மனுவையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

three × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi