இந்நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் வந்த மேற்கண்ட நபர்கள் அடிக்கடி வழக்கறிஞர் கண்ணனுக்கு போன் செய்து நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பித் தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு வழக்கறிஞர் கண்ணன் காவல்துறையினரால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது எனச் சொல்லியும் தொடர்ந்து அவருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வழக்கறிஞர் வீட்டிற்கு கத்தியுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். மேலும் அப்போது வழக்கறிஞர் கண்ணன் இல்லாததால் செல்லும் வழியில் எம்ஜிஆர் நகர் முதல் தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 17 வுயது சிறுவனை கத்தியால் வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.