டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜூன் 1 வரை கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியிருந்த நிலையில் ஜாமின் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது பற்றி விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.