பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவெறும்பூர்: திருச்சி கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(46). பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர். இவரது மனைவி மாலதி. இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் பரகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். கடந்த 22ம்தேதி இரவு வீட்டில் ரவிச்சந்திரன் குடும்பத்தோடு தூங்கி கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள், இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் இரண்டு குண்டு வெடித்து வீட்டின் முன் சேதம் ஏற்பட்டது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. போலீஸ் விசாரணையில்,

ரவிச்சந்திரன் வீட்டின் அருகில் தினமும் அரட்டை அடித்ததை கண்டித்ததால் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (22), சச்சின் (24), ராக்கி (எ) ராகேஷ் (22), லோகேஷ் (23) ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லோகேஷ் என்பவரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்