சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம் செய்யப்பட்டார்.