பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு..!!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு, தேசிய அளவிலான மூத்த நிர்வாகிகள், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் மாயாவதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 வயதான மாயாவதி உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராம் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாயாவதியை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். மேலும் கடந்த 2003ம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி