பண்டிகை, பூஜைகள் என வரிசையாக வரப்போகும் காலம். பொதுவாகவே வீட்டில் வயதானவர்கள், எழுந்து நடக்க முடியாமல் இருப்போர், அல்லது பல கோவில்களுக்கும் சென்று பூஜைகள், அர்ச்சனைகள் செய்து ஆசி பெற்று உடன் அங்கே கொடுக்கப்படும் பிரசாதம் உட்பட அனைத்தும் பெற வேண்டும் என நினைப்பவர். ஆனால் உடல், மனம், மேலும் அவசர வாழ்க்கை என வருடத்திற்கு ஒருமுறை திட்டமிட்டுச் சென்று வருவதே பெரிய வேலையாகி நம்மை சோர்வாக்கிவிடும். இதனை மனதில்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது ‘பக்வான்ஜி‘ செயலி(Bhagwaanji: Book Pooja, Seva). வீட்டிலிருந்துகொண்டே உங்களுக்கு பிடித்த கோவில்களில் பூஜைகள், அர்ச்சனைகளுக்கான பணம் கொடுத்து கலந்துகொள்ளலாம். மேலும் அங்கிருந்து உங்கள் வீட்டு முகவரிக்கு அர்ச்சைகள் செய்து பிரசாதங்களும் கூட பெறலாம். மேலும் குழுவான பக்திச் சுற்றுலா அழைப்புகள், உள்ளூர் ஆன்மிகப் பொருட்கள் விற்கும் கடைகள் என அனைத்தும் இந்தச் செயலியில் கிடைக்கும்.