கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் தாயுடன் சேர்க்க முடியாததால், குட்டி யானை முதுமலை கொண்டு செல்லப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாகன்கள் 3 நாட்களாக முயற்சி செய்தும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க முடியவில்லை. வேறு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்துவிடலாம் என்ற முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தாய் யானையை கண்டறிந்து, குட்டியை அதன் அருகில் கொண்டு சென்றபோது அது ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.