குழந்தையின் மொட்டைக்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கிறதா?

நம் முன்னோர் கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயத்திலும் அறிவியல் ரீதியான நன்மைகள் காரணம் இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாரம்பரியமான சடங்குமுறைகள் பின்பற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் மொட்டை அடிப்பது. அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வில்லை என்றால் 1 சாமி குத்தம் ஆகிவிடும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பெரும்பாலானோர் இதை குலதெய்வத்திற்காகச் செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும், குடும்ப வழக்கமாகவும் கடைபிடிப்பதுண்டு. பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன் மொட்டை அடிப்பதை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குழந்தையின் பிறந்த ஒரு வருடத்தில் குழந்தையின் தாய்மாமன் அல்லது தாயின் தந்தையின் மடியில் வைத்து மொட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணத்தை காண்போம்.

தாயின் கருப்பையில் உள்ள பனிக்குடத்தில் ஒன்பது மாதங்கள் குழந்தை வளரும். அந்த நீர் ரத்தம், மலம், சலம் மற்றும் தண்ணீரால் நிறைந்தது.அந்த நீரில் ஊறிப் போய் இருக்கும் குழந்தையை வெளியே வந்ததும் துணியால் துடைத்து சுத்தம் செய்து விடுகிறோம். ஆனால் தலையில் உள்ள கழிவுகள் அப்படியேதான் இருக்கும். அதை நாம் மொட்டை அடித்துதான் போக்க முடியும்.மொட்டை அடிப்பதன் மூலம் அந்த படிவமானது மயிர்க்கால்களின் ஊடாக தலையிலிருந்து எளிதில் வெளியேறி விடும். மேலும் உடலின் மற்ற பாகங்களில் முடி இல்லாத காரணத்தால் வெயில் நேரடியாக மற்ற பாகங்களில் படும். ஆனால் தலை முடி இருக்கும் பட்சத்தில் சூரிய ஒளி நேரடியாக தலைக்குக் கிடைக்காது. இதன் மூலம் கிருமிகளால் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வரும். ஒற்றைத்தலைவலி மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வராது.குழந்தையின் தலையின் தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. மேலும் சரும துளைகளும் நேரடியாக சூரிய ஒளி, காற்று பட்டு சுவாசிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தையின் உடலையும், தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

உடலுக்கு வைட்டமின் டி சத்து எளிதில் கிடைக்கும். இதனால் எலும்பு, பல் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தையின் முடி அடர்த்தி இல்லாமல் மெலிதாக இருக்கும். மொட்டை அடித்த பின்பு சீராக வளர ஆரம்பிக்கும்.சிலர் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பார்கள். சிலர் குழந்தைகளுக்கு முடி வளர மூன்று முறை மொட்டை அடிப்பார்கள். முதலில் சில கழிவுகள் வெளியேராமல் இருந்தால், அடுத்தடுத்து அடிக்கும் மொட்டைகளில் கழிவுகள் வெளியேறிவிடும் இதனால் தான் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதை வெறுமனே சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதாலேயே முன்னோர்கள் சமய வழிபாட்டுடன் சேர்த்து இதனை பிணைத்தனர்.
– அ.ப. ஜெயபால்.

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!