புதுடெல்லி: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சக்ரபாணி ஆயுர்வேத கிளினிக்கில் தலைமை ஆலோசகராக இருந்த வைத்யா ராஜேஷ் கோடேசா கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020ல் முடிவடைந்த நிலையில், இரண்டு முறை தலா 2 ஆண்டு பதவிகாலம் நீடிக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக மேலும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.