வாரணாசி: அயோத்தியில் ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை கோயில் தலைமை அர்ச்சகர்கள் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் ஆகியோர் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 86 வயதான ஆச்சார்ய லஷ்மிகாந்த் தீட்சித் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார்.