அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள கோடேஷ்வர் கோயிலுக்கு எதிரேவுள்ள வி.ஐ.பி கேட் அருகே சத்ருஹன் விஸ்வகர்மா(25) என்பவர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சத்ருஹன் விஸ்வகர்மா நேற்று அதிகாலை அவரது கையில் இருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவலரின் மரணம் குறித்து தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு