லக்னோ: அயோத்தியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்தது. “பெரும் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒரு நாள் மழைக்கே தாங்கவில்லை. பாஜக மாடலில் உண்மை முகம் இதுதான்” என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.