ஆந்திர எல்லை கிராமங்களில் பணியாற்றி வரும் வருவாய்த்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் தீபா கூறியதாவதாவது: ஆந்திராவிலிருந்து எல்லைப் பகுதிகள் வழியாக சாராயம் மற்றும் போதை பொருள் கடத்தி வந்து தமிழக கிராமங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசாருக்கு வருவாய்த் துறையினர் உதவியாக இருக்க வேண்டும்.
கிராமங்களில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் குறித்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தகவல் தெரிந்துக்கொண்டு விரைந்து நடவடிக்கையின் மூலம் குற்ற செயல்கள் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், தாசில்தார் மதியழகன், பயிற்சி டிஎஸ்பி தர்ஷிகா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், தர்மலிங்கம், ராஜகோபால், மலர், சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.