குழந்தை தொழிலாளர் எதிர்ப்புதின விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அதன்படி முதலாவதாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கலெக்டர் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக தயார் செய்யப்பட்ட கல்வி உபகரணங்களை ஏழ்மை நிலையில் உள்ள பல்வேறு குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியும், பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தொழிலாளர் நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக பிரசார வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை வழியனுப்பி வைத்து கலைநிகழ்ச்சியையும் பார்வையிட்டு, நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தையை பாராட்டி, பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான சாண்டில்யன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஷோபனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) மீனா, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸீலியா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்