மகளிர் உதவி மைய பொறுப்பாளர்கள் வளர்மதி, தீப்தி ஆகியோர் பேசும்போது,‘ மகளிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற மகளிர் பாதுகாப்பு மையம் செயல்படுகிறது. குடும்ப பிரச்னைகள், மற்றும் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 181 என்கிற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்கு தங்குவதற்கு உதவிகள் செய்து தரப்படும்’ என்றனர். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் அதற்கான தவிர்ப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் சிறு குழந்தைகள் திருமணம் செய்வது போக்சோ சட்டபடி தண்டனைக்குரிய குற்றம்’ என்றார். சேரங்கோடு ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.