திமுக மருத்துவர் அணி சார்பில் திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் : திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட மருத்துவரணி மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில், இயன்முறை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய இப்பேரணியை, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணி மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா அருகே நிறைவடைந்தது.

இதையடுத்து நடந்த நிகழ்ச்சிக்கு, திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் இராஜேஸ்பாபு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் விஜயபெருமாள் வரவேற்றார். டாக்டர்கள் சதீஸ்குமார், மதனகோபால், ஜூடி இவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், பரமேஸ்வரி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி