இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதைதான் முக்கியம். அதன்பிறகுதான் பதக்கமும், மரியாதையும். பாகுபலி என தன்னை கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து கிடைத்த அரசியல் பலன், இந்த துணிச்சலான மகள்களின் கண்ணீரை விட அதிகமானதா? பிரதமர் தேசத்தின் காவலர். ஆனால் இதுபோன்ற கொடுமையில் அவரின் பங்கும் இருப்பது வேதனை தருகிறது’ என கூறி உள்ளார்.