ஆவின் பாலகத்தில் அமோனியா வாயு கசிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுக்கின்றனர். நேற்று பக்ரீத் விடுமுறை தினத்தை முன்னிட்டு 40 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பால் குளிரூட்ட பயன்படுத்தக்கூடிய அமோனியா வாயு செல்லும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஊழியர்கள் பதறியடித்து வெளியேறினர். அப்பகுதி மக்களும் இந்த பாதிப்புக்கு ஆளாகினர். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி கசிவை நிறுத்தினர்.

Related posts

வங்கிக்கணக்கு தொடங்க.. லாக்கரை திறக்க.. ரோபோக்களை பயன்படுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்..!!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஈரான்-இஸ்ரேல் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, செபியின் எஃப்&ஓ-வின் புதிய விதி ஆகியவற்றால் பங்குச்சந்தையில் சரிவு