இயந்திரத்தில் முடி சிக்கி தலை துண்டாகி பெண் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். உமா மகேஸ்வரியின் முடி இயந்திரம் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. மோட்டாரில் முடி சிக்கிக் கொண்டதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உமா மகேஸ்வரி உயிரிழந்தார். பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுத்து.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி