சென்னை: முதல்வரின் வழிகாட்டுதலில் வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சத்தை தாண்டியது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நன்றி. கடும் நிர்வாக மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.