ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 76 கி.மீ: தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்

சென்னை: இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் சராசரியாக குறைந்த வேகத்தில் தான் பயணம் செய்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயில் என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதைவிட பாதி வேகத்தில் தான் பயணம் செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டது.

குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் அதிகபட்ச 160 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் விரும்பி டிக்கெட் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21-ம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24-ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று சொல்லப்பட்ட இந்த ரயில் தற்போது அதற்குப் பாதி அளவு வேகத்திலேயே இயக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை 160 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றாலும், பெரும்பாலான வழித்தடங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

 

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!