மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி, மதத்தை புகுத்த வேண்டாம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.