பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்போது குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி ஞாயிறுகளில் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடந்து வருகிறது. ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று ஆகும். அந்த வகையில் இன்று நாகராஜா கோயிலில் இன்ற காலை முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். தொடர்ந்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். நாகராஜா சன்னதிக்கு வெளியே நாகர்சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பொடி தூவியும் வழிபாடுகள் நடத்தினர்.