ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் விளக்கு பூஜை

பெரியபாளையம்: பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆவணி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய்யின்றி வாழவும், பவானி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடந்தது. இதில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர். இதற்கு முன்னதாக பவானி அம்மன் உற்சவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பவானி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி கோவில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு