இந்நிலையில், நேற்று ஆவணி மாதம் பௌர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய்யின்றி வாழவும், பவானி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமர்சியாக நடந்தது. இதில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலர்களால்அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டினர். இதற்கு முன்னதாக பவானி அம்மன் உற்சவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பவானி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி கோவில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.