திருவள்ளூர்: ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை முன் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் மதுவாங்கி கடை முன் உடைத்து பெண்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதான சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மனு தந்தும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.