‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பு செய்வதோடு, உள்நாட்டு சந்தையில் முன்னிலை வகிக்கவும் இந்நிறுவனம் முயன்று வருகிறது. எதிர்காலத்தில் சர்வதேச அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில் முக்கிய பாதுகாப்பு நிறுவனமாக வளர ஏ.வி.என்.எல். திட்டமிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் ஆயத்தமாகி வருகிறது.
நிறுவன தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுக்கும். 2025-26ம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்ட முடிவு எடுத்திருக்கிறோம். தளவாட உற்பத்தி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என்றார்.