சென்னை: சென்னை அடுத்த ஆவடி அருகே வெள்ளனூர் பகுதியில் இறந்தவரின் சடலத்துடன் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு இடுகாடு இல்லை என கூறி ஊராட்சி அலுவலகத்தின் முன்பு சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.